தமிழகத்தில் புதிதாக 649 பேருக்கு கரோனா தொற்று :

தமிழகத்தில் புதிதாக 649 பேருக்கு கரோனா தொற்று :
Updated on
1 min read

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 369, பெண்கள் 280 என மொத்தம் 649 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 123, கோவையில் 107 பேர் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 27 லட்சத்து 36,695 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் 7,611 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இளைஞர்கள், முதியவர்கள் உட்பட 9 பேர் நேற்று உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,633 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 8,634 பேர் இறந்துள்ளனர்.

தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in