நெல்லை, கோவில்பட்டியில் மறியல் - மாற்றுத் திறனாளிகள் 105 பேர் கைது :

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம்  முன்  போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.  படம்: மு.லெட்சுமி அருண்
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள். படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மறியலில் ஈடுபட்ட 53 மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கடுமையாக ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

சங்க மாவட்ட துணைத் தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். செயலாளர் குமாரசாமி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சங்கரசுப்பு, மெய்யசாமி, நடராஜன், லெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 53 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவில்பட்டி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in