

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழையின் தீவிரம் குறைந்து ள்ளது. பகலில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்படுகிறது. இரவில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் கருப்பாநதி அணையில் 5 மி.மீ., அடவிநயினார் அணையில் 4 மி.மீ., கடனாநதி அணையில் 3 மி.மீ., சிவகிரியில் 2 மி.மீ. மழை பதிவானது.
கடனாநதி அணை நீர்மட்டம் 83.20 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 80.25 அடியாக வும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 71.20 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 131.50 அடியாகவும் இருந்தது.
பாபநாசத்தில் 11 மி.மீ. மழை