குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு :

குட்டையில் மூழ்கி  2 மாணவர்கள் உயிரிழப்பு :
Updated on
1 min read

விழுப்புரம் அருகே சேர்ந்தனூர் வெள்ளகுளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் விக்னேஷ்(8), சந்திரமூர்த்தி மகன் தர்ஷன்(6). இருவரும் அதே பகுதியில் உள்ளபள்ளியில் படித்து வந்தனர். இருவரும் நேற்று மாலை விளை யாட்டிக்கொண்டு இருந்தனர். அப்போது அதே பகுதியில் உள்ள ரயில் பாதையின் கீழ் உள்ள குட்டையில் தண்ணீர் தேங்கி இருந்தது. அந்த குட்டையில் இறங்கி குளித்தனர். அப்போது அவர்கள் தண் ணீரில் மூழ்கினர்.

வெகு நேரமாக அவர்களை காணாததால் உறவினர்கள் தேடினர். அந்த குட்டை அருகே சைக்கிள்கிடந்துள்ளது. இதனால் சந்தே கித்து குட்டையில் தேடினர். அப்போது விக்னேஷ், தர்ஷன் ஆகியோர் தண்ணீரில் மூழ்கிமயங்கி இருந்தனர். உடனேஅருகில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர்.

அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வளவனூர் ‌போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in