பொன்மலையில் இளைஞர் கொலை :

பொன்மலையில் இளைஞர் கொலை :
Updated on
1 min read

திருச்சி கொட்டப்பட்டு எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் சின்ராசு(21). கடந்த செப்.15-ம் தேதி இரவு 7.30 மணியளவில் பொன் மலைப்பட்டி கடைவீதியில் நின்றுகொண்டிருந்த சின்ராசுவை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இது தொடர்பாக பொன்மலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து பொன்னேரிபுரத் தைச் சேர்ந்த அலெக்ஸ் உள்ளிட் டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், அலெக்ஸின் சகோதரர் பெலிக்ஸ்(25) நேற்று இரவு மாவடிகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப் போது அடையாளம் தெரியாத கும்பல் அவரை வழிமறித்து வெட்டிக் கொலை செய்தது.

பொன்மலை, திருவெறும்பூர் போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். சின்ராசு கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் பெலிக்ஸ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in