ஆரணி வியாபாரிகள் சங்கம் சார்பில் - குன்னூர் விபத்தில் உயிரிழந்த : ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி :

விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு ஆரணியில் வியாபாரிகள் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு ஆரணியில் வியாபாரிகள் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
Updated on
1 min read

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்களுக்கு ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆரணி நகர அனைத்து வணிகர்கள் நல சங்கம், திருவண்ணாமலை மாவட்ட குளிர்பான உற்பத்தியாளர்கள் நலச் சங்கம், தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆரணி பயிற்சி டிஎஸ்பி ரூபன் குமார், ஆய்வாளர்கள் கோகுல்ராஜன், முத்துக்குமார், வியாபாரிகள் ராஜன், ரமேஷ், செல்வம், நடராஜன், பழனி உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in