புதிதாக 688 பேருக்கு கரோனா தொற்று :

புதிதாக 688 பேருக்கு கரோனா தொற்று :
Updated on
1 min read

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 415, பெண்கள் 273 என மொத்தம் 688 பேர்கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேற்கு வங்கத்தில் இருந்து வந்த ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 123, கோவையில் 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம், பாதிப்பு எண்ணிக்கை 27 லட்சத்து 34,034 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 26 லட்சத்து 89,627 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று739 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 7,821 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று இளைஞர்கள், முதியவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in