சீனாவை பின்வாங்க வைத்தவர் தலைமைத் தளபதி பிபின் ராவத் : ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்த, மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உருவப்படத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.  படம்: ஜி.ஞானவேல்முருகன்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்த, மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உருவப்படத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. படம்: ஜி.ஞானவேல்முருகன்
Updated on
1 min read

ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்இழந்த நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்உருவப்படத்துக்கு ஆளுநர். அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்திருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்கலை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பிபின் ராவத்தின் உருவப்படத்துக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து, அவர் இரங்கல் தெரிவித்து பேசும்போது, ‘‘இந்திய ராணுவத்தில் பிபின் ராவத்தின் பங்களிப்பு சிறப்பானது. தீர்க்கமான முடிவுகளை எடுத்தவர். பிபின்ராவத்தின் வியூகம் மற்றும் உத்திகாரணமாக இந்தோ - திபெத் எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்ட சீனா பின்வாங்கியது. மிகச் சிறந்த ராணுவ வீரரை நாடு இழந்துள்ளது’’ என்றார்.

தொடர்ந்து, அமைச்சர்கள் க.பொன்முடி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆட்சியர் சு.சிவராசு ஆகியோர் பிபின் ராவத் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in