சேந்தமங்கலம், ராசிபுரத்தில் அரசு விழா 2,655 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கல் :

நாமக்கல் அருகே எருமப்பட்டியில் நடைபெற்ற விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங்.
நாமக்கல் அருகே எருமப்பட்டியில் நடைபெற்ற விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங்.
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே எருமப்பட்டி, துத்திக்குளம் மற்றும் ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். எம்எல்ஏ கு.பொன்னுசாமி முன்னிலை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பங்கேற்றுப் பேசினார். தொடர்ந்து 258 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, முதியோர் ஓய்வூதியம் என மொத்தம் 2,655 பயனாளிகளுக்கு ரூ.3.09 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் ந.கதிரேசன், கோட்டாட்சியர்கள் த.மஞ்சுளா, தே.இளவரசி, ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கே.பி.ஜெகந்நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in