சாலையில் நாற்று நடும் போராட்டம் :

சாலையில் நாற்று நடும் போராட்டம் :
Updated on
1 min read

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 65-வது வார்டு நேதாஜி நகர் விரிவாக்கப் பகுதியில் சேறும் சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம் நேற்று நடைபெற்றது.

போராட்டத்துக்கு, நேதாஜி நகர் விரிவாக்கப் பகுதி நல சங்கத்தின் தலைவர் ஏ.குத்புதீன் தலைமை வகித்தார். குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பா.லெனின் பேசினார்.

திருவெறும்பூர் நேதாஜிநகர் விரிவாக்கப்பகுதியில் சேறும் சகதியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும், குடிநீர், தெரு விளக்கு வசதிகளை செய்ய வேண்டும். இப்பகுதியில் திரியும் வெறிநாய்கள், பன்றிகளை பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் நலச் சங்கச் செயலாளர் இளையராஜா, நேதாஜி நகர் நலச் சங்கத் தலைவர் கணேசன், துணைத் தலைவர் திருவேங்கடம் மற்றும் குடியிருப்புவாசிகள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in