கரூர் மாவட்டம் கடவூர் அருகே கிணற்றில் குதித்து - 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை :

கரூர் மாவட்டம் கடவூர் அருகே கிணற்றில் குதித்து -  2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை :
Updated on
1 min read

கரூர் மாவட்டம் கடவூர் அருகேயுள்ள செம்பியநத்தத்தை அடுத்த பூசாரிபட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல் (33). இவரது மனைவி சரண்யா(30). இவர்களுக்கு 6 மற்றும் 3 வயதில் 2 மகள்கள் இருந்தனர். சரண்யா நூறுநாள் வேலைக்கு சென்று வந்துள்ளார். அவ்வப்போது கரூரில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களுக்கும் வேலைக்கு செல்வது வழக்கம். சரண்யா அண்மைக் காலமாக சற்று மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் உறவினர் வீட்டு திருமணத்துக்கு சக்திவேல் சென்ற நிலையில், அன்று நள்ளிரவில் வீட்டில் இருந்த சரண்யா மற்றும் குழந்தைகளை காணவில்லை. அவரது உறவினர்கள் தேடியபோது, அவர்களது விவசாயக் கிணற்றில் குழந்தைகளுடன் சரண்யா குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

பாலவிடுதி போலீஸார், குஜிலியம்பாறை தீயணைப்பு வீரர்கள் சடலங்களை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in