குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது :

குண்டர் சட்டத்தில்  2 பேர் கைது :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் திருமா னூரை அடுத்த கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை(57).

இவர், 10 வயது சிறுமி கள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அதேபோல, ஜெயங்கொண்டத்தை அடுத்த வாரியங்காவல் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார்(27). இவர், 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இந்நிலையில், மாவட்ட எஸ்பி கே.பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில் மேற்கண்ட 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி நேற்று உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in