சீரான குடிநீர் விநியோகம் கோரி அரசு ஊழியர்கள் குடும்பத்தினர் மறியல் :

சீரான குடிநீர் விநியோகம் கோரி  அரசு ஊழியர்கள் குடும்பத்தினர் மறியல் :
Updated on
1 min read

பெரம்பலூர் துறைமங்கலத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான அரசு ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 15 நாட்களாக இந்த குடியிருப்புகளுக்கு நகராட்சி மூலம் குழாய்களில் விநியோகம் செய்யப்படும் குடிநீர் வரவில்லை. இதுகுறித்து நகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அரசு ஊழியர் குடியிருப்பு பகுதி மக்கள் நேற்று முன்தினம் இரவு துறைமங்கலம் மூன்று சாலை செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து அங்கு வந்த பெரம்பலூர் போலீஸார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், மறியல் கைவிடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in