தமிழகத்தில் புதிதாக 719 பேருக்கு கரோனா தொற்று :

தமிழகத்தில் புதிதாக 719 பேருக்கு கரோனா தொற்று :
Updated on
1 min read

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 429, பெண்கள் 290 என மொத்தம் 719 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 128,கோவையில் 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 27 லட்சத்து 31,235 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 26 லட்சத்து 86,683 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 737 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகம் முழுவதும் 8,013 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று இளைஞர்கள், முதியவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,539 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 8,617 பேர்இறந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in