மாணவர் மர்ம மரணம் சிபிசிஐடி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம் :

மாணவர் மர்ம மரணம் சிபிசிஐடி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்  :
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி வட்டம் குதிரைசந்தல் கிராமத்தைச் சேர்ந்த வெவ்வேறு சமூக மாணவர் மற்றும் மாணவி இருவர் சோமாண்டார்குடி பகுதியில் தற்கொலை செய்துகொண்டதாக கள்ளக்குறிச்சி காவல்துறை அண்மையில் வழக்குப்பதிவு செய்துள்ளது. தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் பள்ளி மாணவரின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், அவரது உடல் ஆசிட் ஊற்றி எரிக்கப்பட்டதாகவும் சந்தேகங்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில், மாணவரின் மரணம் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க வலியுறுத்தி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டக் குழு சார்பில் நேற்று கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in