மானாமதுரை அருகே கிராம மக்கள் மறியல் :

மானாமதுரை அருகே கரிசல்குளத்தில் சாலை மறியல் செய்ய முயன்ற கிராம மக்கள்.
மானாமதுரை அருகே கரிசல்குளத்தில் சாலை மறியல் செய்ய முயன்ற கிராம மக்கள்.
Updated on
1 min read

மானாமதுரை அருகே மேலப்பசலை கண்மாயிலிருந்து கள்ளிக்குடி, புத்தூர், சோமாத்தூர், கரிசல்குளம் கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதற்கு மேலப்பசலை கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து கண்மாயிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப் பட்டது.

இந்நிலையில் நேற்று தங்களது கண்மாய்களுக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டதைக் கண்டித்து கள்ளிக்குடி, புத்தூர், சோமாத்தூர், கரிசல்குளம் கிராம மக்கள் மதுரை - ராமேசுவரம் நான்குவழிச் சாலையில் மறியல் நடத்த முயன்றனர். அவர்களிடம் வட்டாட்சியர் தமிழரசன் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அமைதிக் கூட்டம் நடத்தி இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் கூறியதை அடுத்து, கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in