முதல்வரை தரக்குறைவாக பேசியதாக பாஜக நிர்வாகி கைது :

முதல்வரை தரக்குறைவாக பேசியதாக பாஜக நிர்வாகி கைது :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பாஜக சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில துணைத்தலைவர் அகோரம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அகோரம் அவதூறாக பேசியதாக, ஜெயங்கொண்டம் போலீஸார் 4 பிரிவுகளின்கீழ் நேற்று வழக்குப் பதிவு செய்து, சீர்காழியில் அவரை கைது செய்தனர்.

தொடர்ந்து,ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் அகோரத்தை போலீஸார் ஆஜர்படுத்தினர். பின்னர் அவருக்கு நீதிபதி சுப்பிரமணியன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in