பேருந்தில் பெண்ணிடம் 5 பவுன் திருட்டு :

பேருந்தில் பெண்ணிடம்  5 பவுன் திருட்டு :
Updated on
1 min read

அருப்புக்கோட்டை ராஜீவ் நகரைச் சேர்ந்த மனோகரன் மனைவி ருக்குமணி (54). அருப்புக்கோட்டை சிவன்கோயிலுக்கு செல்ல அரசு பேருந்தில் ஏறினார். காந்தி நகருக்கு பேருந்து வந்தபோது, ருக்குமணி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலி அறுந்திருந்தது. அருகிலிருந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சங்கிலியை வாங்கி ருக்குமணியின் பர்சில் வைப்பதுபோல் வைத்துள்ளார். சிவன்கோயில் பேருந்து நிறுத்தத்தில் ருக்குமணி இறங்கி பர்சை பார்த்தபோது சங்கிலியை காணவில்லை. நகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in