தோகைமலை அருகே 11 பவுன் நகைகள் திருட்டு :

தோகைமலை அருகே 11 பவுன் நகைகள் திருட்டு :
Updated on
1 min read

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பதினொன் றரை பவுன் நகைகள் திருடு போன சம்பவம் குறித்து போலீ ஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் குளித் தலையை அடுத்த தோகைமலை அருகேயுள்ள கல்லடையைச் சேர்ந்தவர் சேசு(65). விவசாயி. இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு ஆடு, மாடுகளை மேய்க்க சென்றுள்ளார். மதியம் சேசு வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவிலிருந்த பதினொன்றரை பவுன் நகைகள் திருடுப் போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சேசு அளித்த புகாரின்பேரில் தோகைமலை போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in