வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு :

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு :
Updated on
1 min read

திருப்பூர் கல்லூரி சாலை சாதிக் பாட்ஷா நகர் செண்பகத் தோட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (48). பனியன் கழிவுக் கிடங்கு வைத்துள்ளார். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று கல்லூரி சாலையில் மளிகைப் பொருட்களை வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல ராஜேந்திரனும், அவரது மனைவியும் மளிகைப் பொருட்கள் வியாபாரத்துக்கு சென்றுவிட்டு, இரவு வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த, 15 பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டுப்போனது, தெரியவந்தது. திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in