பெண்ணுக்கு தொல்லை கொடுத்தவர் கைது :

பெண்ணுக்கு தொல்லை கொடுத்தவர் கைது  :
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம், பணக்குடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (40). இவர், அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணை அடிக்கடி கேலி செய்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து, தவறாக நடக்க முயன்றுள்ளார். அவர் கூச்சலிட்டதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில, அந்த பெண்ணின் செல்போனுக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச படங்களை அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அப்பெண், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் புகார் மனு அளித்தார். எஸ்பி உத்தரவின்பேரில் சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, செல்வகுமாரை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in