

‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியாக திருவண்ணாமலை தேரடி வீதியில் மழையில் நனைந்து கொண்டிருந்த பஞ்ச ரதங்களை பாதுகாக்க தகடுகள் பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின், 7-ம் நாள் உற்சவத்தில் மகா தேரோட்டம் நடைபெறும்.
விநாயகர், வள்ளி தெய் வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி திருத் தேர்களில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். கரோனா தொற்று காரணமாக கடந்தாண்டும், இந்தாண்டும் மாட வீதியில் நடைபெறும் சுவாமிகளின் உற்சவங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதற்கு மாற்றாக, கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் சுவாமி உற்சவங்கள் நடைபெற்றன. இந்நிலையில், பஞ்ச ரதங்களை சீரமைக்க, அதனை சுற்றி பாதுகாப்புக்காக அமைக்கப் பட்டிருந்த பைபர் மற்றும் இரும்பு தகடுகள் கடந்த செப்டம்பர் மாதம் அகற்றப்பட்டன.
பக்தர்கள் வேதனை
தகடுகள் பொருத்தும் பணி
பஞ்ச ரதங்களை பாதுகாக்க வேண்டும் என செய்தி வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’க்கு பக்தர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.