பணகுடி அனுமன் நதியில் 3-வது நாளாக வெள்ளம் :

பணகுடி அனுமன் நதியில்  3-வது நாளாக வெள்ளம் :
Updated on
1 min read

பணகுடி அருகிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் அனுமன் நதி மற்றும் குத்தரபாஞ்சன் அருவியில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ராதாபுரம் தாலுகாவில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ராதாபுரம் தாலுகாவில் உள்ள அனைத்து குளங்களும் நீண்ட காலத்துக்கு பிறகு நிரம்பியுள்ளன.

நீராட தடை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு பார்வை யிட்டார். கொமந்தான் குளத்தி லுள்ள 60 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் ஒரு மாதத்துக்கான மளிகை பொருட்களையும், ரெகுநாதபுரத்தில் வீடு இழந்த லெட்சுமணன் குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் ஒரு மாதத்துக்கான அரிசி, மளிகை பொருட்களையும் வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in