கோடநாடு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு :

கோடநாடு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு :
Updated on
1 min read

கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு விசாரணையை டிசம்பர்23-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளைவழக்கு விசாரணை, உதகையில்உள்ள மாவட்ட நீதிமன்றத்தில்நேற்று விசாரணைக்கு வந்தது.

சயான், வாளையாறு மனோஜ்மட்டுமே ஆஜராகினர். அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர்.விசாரணை தொடங்கியதும் புலன் விசாரணைக்கு நீண்ட அவகாசம் தேவை என அரசு வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர். அதன் பேரில், நீதிபதி சஞ்சய் பாபா, வழக்கு விசாரணையை டிசம்பர் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரது ஜாமீன் மனுக்களை நீதிபதி சஞ்சய் பாபா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in