வடமாநில இளைஞர் அடித்துக்கொலை : ஊத்துக்குளியில் 3 பேர் கைது

வடமாநில இளைஞர் அடித்துக்கொலை :  ஊத்துக்குளியில் 3 பேர் கைது
Updated on
1 min read

ஊத்துக்குளி அருகே கூலிபாளையம் நான்கு சாலை - வாவிபாளையம் சாலையில் அமைந்துள்ள நஞ்சராயன் குளத்தில் இருந்து அடையாளம் தெரியாத சுமார் 25- 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை கைப்பற்றி ஊத்துக்குளி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், நஞ்சராயன் குளத்துக்கு அருகே உள்ள நஞ்சராயன் நகரில் வசித்து வரும் குமார் (48), அப்துல்லா (35), பிச்சைமுத்து (35) ஆகியோரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அதில், கடந்த 21-ம் தேதி இரவு குமாரின் மகள் அனிதா வீட்டுக்குள் அந்நபர் அத்துமீறி நுழைந்ததும், அந்நபரை பிடித்து மூவரும் பலமாக தாக்கியதில், அவர் உயிரிழந்ததும், தெரியவந்தது.

மேலும், சடலத்தை குளத்தில் வீசியதையும், 3 பேரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர். உயிரிழந்தவர், வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், தொழிலாளியாக இருந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவரது விவரம் தொடர்பாக ஊத்துக்குளி போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in