16 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய துறையூர் பெரிய ஏரி :

16 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய துறையூர் பெரிய ஏரி  :
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள பெரிய ஏரி, 16 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக நிரம்பியுள்ளது.

திருச்சி மாவட்டம் பச்சமலை வண்ணாடு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக, துறையூர் பெரிய ஏரி 16 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முன்தினம் இரவு முழுக் கொள்ளளவை எட்டியது.

தொடர்ந்து, மழைநீர் வரத்து இருப்பதால் உபரிநீர் ஏரியிலிருந்து அப்படியே வெளியேறி வருகிறது. இதனால், சிவன் கோயில் தெரு முதல் ஆத்தூர் சாலை வரை உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.

மேலும், துறையூரில் உள்ள 2 தெப்பக்குளங்கள் மற்றும் சிக்கத்தம்பூர், செல்லிப்பாளையம், வரதராஜபுரம், செங்காட்டுப்பட்டி ஆகிய ஏரிகளும் நிறைந்துள்ளன.

இந்தநிலையில், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு மழைநீர் சூழ்ந்த பகுதிகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, எம்எல்ஏ செ.ஸ்டாலின்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் வே.பிச்சை, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in