டாஸ்மாக் ஊழியர்களிடம் பணம் பறிப்பு :

டாஸ்மாக் ஊழியர்களிடம் பணம் பறிப்பு :
Updated on
1 min read

திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் ஊழியர் களை தாக்கி ரூ.20 ஆயிரத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை அடுத்த கெங்கம்பட்டு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருபவர்கள் சரவணன், முருகன். இவர்கள் இருவரும் பணி முடிந்து வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர். மதுபானக்கடை அருகே சிறிது தூரம் சென்றதும், இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், விற்பனையாளர்களை வழிமறித்தனர். மேலும், கத்தியை காட்டி மிரட்டி சரவணன் வைத்திருந்த பணப் பையை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து திருவண்ணாமலை கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், திருவண்ணாமலை அடுத்த காஞ்சி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை மூடிவிட்டு, விற்பனையாளர் விஜயகாந்த் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அவரை கத்தியை காட்டி மிரட்டிய 2 மர்ம நபர்கள், அவரிடம் இருந்த பையை பறித்து சென்றனர். ஆனால், அந்த பையில் பணம் இல்லை.

இதுகுறித்து கடலாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in