திருப்பத்தூர் மாவட்டத்தில் - மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமை எம்.பி., அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமை எம்.பி., அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.
Updated on
1 min read

தி.மலை எம்.பி., தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்துார் மற்றும் ஜோலார்பேட்டை 2 சட்டப்பேரவை தொகுதிகளில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ ஆய்வு முகாம்ஜோலார்பேட்டையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, தி.மலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் தேவராஜி (ஜோலார்பேட்டை), நல்லதம்பி (திருப்பத்துார்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் 67 மாற்றுத் திறனாளிகளுக்குதேசிய அடையாள அட்டையை தி.மலை எம்பி அண்ணாதுரை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது, ‘இம்முகாம் மூலம் 450 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் தகுதியுள்ள 67 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 156 உதவி மருத்துவஉபகரணங்கள் வழங்கப்படும். மீதமுள்ள மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in