நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுகவினர் விருப்ப மனு :

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுகவினர் விருப்ப மனு :
Updated on
1 min read

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட விரும்பும் நபர்களிடம் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு, திமுக,அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

இந்நிலையில், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்பும் நபர்களிடம் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில், திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் திமுகவின் அனகாபுத்தூர் நகர செயலாளர் நரேஷ் கண்ணா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு வார்டுகளில் போட்டியிட 37-க்கும்மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.

இதேபோல், தாம்பரம் மாநகராட்சி, மதுராந்தகம், மாமல்லபுரம், திருப்போரூர், இடைக்கழிநாடு பேரூராட்சிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி, உத்திரமேரூர், பெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமானோர் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in