தூத்துக்குடி ஆட்டோ ஓட்டுநர் கொலையில் இருவர் கைது :

தூத்துக்குடி ஆட்டோ ஓட்டுநர் கொலையில் இருவர் கைது :
Updated on
1 min read

தூத்துக்குடி செல்சீனி காலனியைச் சேர்ந்தவர் சாரதி (எ) பார்த்தசாரதி (35). ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்றுமுன்தினம் படுகொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். எஸ்பி ஜெயக்குமார்உத்தரவின் பேரில் தென்பாகம் ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக செல்சீனி காலனியைச் சேர்ந்த மாரிமுத்து (26), வள்ளிநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (20) ஆகிய இருவரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in