சாலையை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம் :

சாலையை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்  :
Updated on
1 min read

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமமுக சார்பில் போராட்டம் நடந்தது.

தூத்துக்குடி டூவிபுரம் 2-வது தெருவில் புதை சாக்கடை திட்ட மூடிகள் திறந்து இருப்பதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், பழுதான நிலையில் காணப்படும் பூ மார்க்கெட் சாலையை சீரமைக்க வலியுறுத்தியும் இப்போராட்டம் நடைபெற்றது. அமமுக 30-வது வட்டச்செயலாளர் காசிலிங்கம் தலைமை வகித்தார். ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in