திருச்சியில் வெவ்வேறு விபத்துகளில் - ஆசிரியை உட்பட 2 பேர் உயிரிழப்பு :

திருச்சியில் வெவ்வேறு விபத்துகளில் -  ஆசிரியை உட்பட 2 பேர் உயிரிழப்பு :
Updated on
1 min read

திருச்சியில் நடைபெற்ற வெவ்வேறு விபத்துகளில் பள்ளி ஆசிரியை உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

திருச்சி கே.கே.நகர் இ.பி காலனியைச் சேர்ந்தவர்கள் ராமலிங்கம்(48), கிருஷ்ண மூர்த்தி(62). இவர்கள் இருவரும் கடந்த 18-ம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் தென்றல் நகர் சந்திப்பு பகுதியில் சென்றபோது, சாலையின் குறுக்கே வந்த மாடு மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில், கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த கிருஷ்ணமூர்த்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

இதேபோல வயலூர் சாலையிலுள்ள அம்மையப்ப நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் மனைவி மங்கையர்கரசி(49). கன்டோன்மென்ட் பாரதியார் சாலை யிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியை யாக பணிபுரிந்த இவர், நேற்று காலை வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு புறப்பட்டார். எம்ஜிஆர் சிலை பாலப் பகுதியில் வந்தபோது அவ்வழியாக வந்த தனியார் கல்லூரி பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆசிரியை மங்கையர்கரசி இறந்தார்.

இந்த விபத்துகள் குறித்து போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in