கிஷான் கடன் அட்டை வழங்கும் முகாம் :

கிஷான் கடன் அட்டை வழங்கும் முகாம்  :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் கிஷான் கடன் அட்டைகள் வழங்க நிலையான இயக்க செயல்முறைகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு, அவர்களின் நிதி ஆதாரங்களை பெருக்கும் விதமாக கிஷான் கடன் அட்டைகள் வழங்க முகாம்கள் நடத்தப்பட உள்ளன. விவசாயிகள் கிஷான் கடன் அட்டைகள் பெற உரிய விண்ணப்பத்துடன் ஆதாரங்களை இணைத்து (புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்கம்) முகாமில் அல்லது அருகில் உள்ள கால்நடை மருந்தகம் அல்லது அரசினர் கால்நடை கிளை நிலையத்தில் அளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in