குரூப்-4 தேர்வுக்கு நவ. 25-ல் சான்றிதழ் சரிபார்ப்பு :

குரூப்-4 தேர்வுக்கு நவ. 25-ல் சான்றிதழ் சரிபார்ப்பு :
Updated on
1 min read

குரூப்-4 பதவிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த 2019 செப். 1-ம் தேதி நடத்தப்பட்டு, மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்பட்டன. இத்தேர்வு தொடர்பான 3-வது கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகிய பதவிகளுக்குநவ.25-ம் தேதி காலை நடைபெறுகிறது.

இதற்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசைபட்டியல் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதத்தை அதில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அழைப்பாணை தனியே அனுப்பப்படாது என்று டிஎன்பிஎஸ்சி செயலர் பி.உமாமகேஸ்வரிநேற்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in