பொதுப்பணித்துறை பொறியாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம் :

பொதுப்பணித்துறை பொறியாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

ஊழியர் விரோதப்போக்கை கைவிட வலியுறுத்தி பொதுப் பணித்துறை கண்காணிப்பு பொறியாளருக்கு எதிராக மது ரையில் பணியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பெரியார், வைகை வடிநில வட்டக் கண்காணிப்பு பொறியாளராக இருப்பவர் மா.சுகு மார். இவர் ஊழியர் விரோத போக்குடன் செயல்படுவதாகக் கூறி நேற்று பொதுப்பணித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தல்லாகுளம் பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்ட பொதுப்பணித்துறை பணியாளர் சங்கத்தினர் பங்கேற்றனர். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மதுரை மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் நீதிராஜா, மதுரை மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் அமுதா, இ.கம்யூனிஸ்ட் நிர்வாகி காளிதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

அலுவலர்கள் பேசுகையில், செயற்பொறியாளர் சுகுமார் மீது பெண் ஊழியர்களிடம் ஒருமையில் பேசுவது, பணியில் ஒத்துழைப்பு அளிக்காதது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து சுமத்தப்பட்டு வருகின்றன. இதே போக்கு நீடிக்கும் நிலையில், மாநில அளவில் போராட்டத்தில் ஈடுபட நேரிடும்’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in