ரூ.2.64 கோடி மோசடி பாதிக்கப்பட்டோர் அமைச்சரிடம் புகார் :

ரூ.2.64 கோடி மோசடி பாதிக்கப்பட்டோர் அமைச்சரிடம் புகார் :
Updated on
1 min read

சென்னையைச் சேர்ந்த நீதிமணி, இவரது மனைவி மேனகா, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஆனந்த் ஆகியோர் நிதி நிறுவனம் நடத்தி ரூ.300 கோடி வரை மோசடி செய்தது தொடர்பான வழக்கை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர்.

இந்நிலையில், இந்நிறுவனத் தில் தாங்கள் ரூ.2.64 கோடி முதலீடு செய்து ஏமாற்றப் பட்டதாகவும், இது தொடர்பாக புகார் அளித்தபோது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றும் பரமக்கு டியைச் சேர்ந்த நாகேஸ்வரி, தெய்வேந்திர நல்லூரைச் சேர்ந்த அழகுமுத்து, பரமக்குடியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், கொழுந்துரையைச் சேர்ந்த முரு கேசன், கதிரேசன் ஆகியோர் அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் புகார் தெரிவித்தனர். அவர் அந்த மனுவை மாவட்ட எஸ்.பி.க்கு பரிந்துரை செய்தார்.

ரூ. 2.64 கோடி மோசடி புகார் குறித்து மதுரை பொருளாதார குற்றப் பிரிவுக்கு பரிந்துரைக்க உள்ளதாக ராமநாதபுரம் டிஎஸ்பி திருமலை தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in