சிறப்பு கிராம சபை கூட்டம் :

சிறப்பு கிராம சபை கூட்டம்   :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் உள்ள 19 ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சமூக தணிக்கை தொடர்பான சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. வைகுண்டம் ஒன்றியம் கீழ்பிடாகை அப்பன்கோவில் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு கூட்டத் தலைவர் சிவராமலிங்கம் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் அன்றோ, ஊராட்சி தலைவர் சந்தனமாரி முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் முருகன் வரவேற்றார். சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் முத்துமுருகன் சமூக தணிக்கை கூட்டப் பொருட்கள் குறித்து கலந்துரையாடல் செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in