திருக்கோஷ்டியூரில் கிர்த்திகா தீப உற்பசவம், சொக்கப்பனை :

திருக்கோஷ்டியூரில் சவுமிய நாராயண பெருமாள் கோயில்  திருப்பாற்கடல் குளத்தில் கிர்த்திகா தீப உற்சவம் நடந்தது.
திருக்கோஷ்டியூரில் சவுமிய நாராயண பெருமாள் கோயில் திருப்பாற்கடல் குளத்தில் கிர்த்திகா தீப உற்சவம் நடந்தது.
Updated on
1 min read

சிவகங்கை தேவஸ்தானத்துக்குட்பட்ட திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் திருகார்த்திகையையொட்டி ஆண்டுதோறும் கிர்த்திகா தீபம் உற்பசவம் நடக்கும். கடந்த ஆண்டுகளில் கோயில் எதிரேயுள்ள திருப்பாற்கடல் குளத்தில் நடு தெப்பத்தில் குறைவாக இருக்கும் தண்ணீரில் கிர்த்திகா தீபம் விடப்பட்டது.

ஆனால் 16 ஆண்டுக்கு பிறகு இந்தாண்டு திருப்பாற்கடல் குளம் முழுமையாக நிரம்பியுள்ளது.

இதையடுத்து நேற்றிரவு கிர்த்திகா தீபம் உற்பசவம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை காண குளம் முன்பாக உள்ள தீர்த்த மண்டபத்தில் உற்சவர் எழுந்தருளினார். தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமி வீதி உலாவுக்கு பிறகு கோயிலை அடைந்தது. விழா ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான அதிகாரிகள் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in