உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் நாளை தொடக்கம் :

உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் நாளை தொடக்கம் :
Updated on
1 min read

திருச்சி: திருச்சி உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோயிலில் ஆண்டுதோறும் தாயார் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டு ஊஞ்சல் உற்வசம் நாளை(நவ.20) தொடங்குகிறது. இதையொட்டி, நாளை மாலை 6 மணிக்கு தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, மாலை 6.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தை சேர்வார். அங்கு அலங்காரம் செய்யப்பட்டு, இரவு 7.15 மணிக்கு ஊஞ்சல் கண்டருள்வார். பின்னர், அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, மூலஸ்தானம் சென்றடைவார்.

இதேபோன்று புறப்பாடு நவ.25-ம் தேதி வரை நடைபெறும். நவ.26-ம் தேதி ஊஞ்சல் மண்டபத்தில் இரவு 7.15 மணிக்கு ஊஞ்சல் கண்டருளி, இரவு 8.30 மணிக்கு ஆளும் பல்லக்கில் புறப்பட்டு தாயார் மூலஸ்தானம் சேர்வார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in