இரும்பு கம்பிகள் திருட்டு :

இரும்பு கம்பிகள் திருட்டு :
Updated on
1 min read

தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் கட்டுமானப் பணிகளுக்காக வைத்திருந்த 100 கிலோ இரும்பு கம்பிகள் கடந்த 16-ம் தேதி திடீரெனகாணாமல் போனது. இதுகுறித்துதனியார் கட்டுமான நிறுவனத்தைசேர்ந்த பொறியாளர் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (29) புதுக்கோட்டைகாவல் நிலையத்தில் புகார்அளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரித்ததில் , அதே இடத்தில் கட்டிட வேலை செய்துவந்த முத்தையாபுரம் சுந்தர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் (45) என்பவர் இரும்புக் கம்பிகளை திருடிச் சென்றது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸார், இரும்புக் கம்பிகளை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in