சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி - சேலத்தில் பொதுமக்கள் சாலை மறியல் :

சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி -  சேலத்தில் பொதுமக்கள் சாலை மறியல் :
Updated on
1 min read

சேலம் அரிசிபாளையத்தில் சத்திரம் மேம்பாலத்தின் இறக்கம் அருகே சாலை சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணியின்போது, அவ்வழியாக செல்லும் குடிநீர் குழாய் உடைந்து சேதம் அடைந்தது. இதனால், இப்பகுதியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று சீரான குடிநீர் வழங்கக்கோரி அரிசிபாளையம் பாவேந்தர் நகர் பொதுமக்கள் சத்திரம்- தெப்பக்குளம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது:

இப்பகுதியில் சாலை சீரமைப்புப் பணியின்போது, குடிநீர் குழாய் உடைந்து சேதமானது. பல நாட்களாகியும் குடிநீர் குழாய் சீரமைக்கப்படவில்லை. இதனால், குடிநீர் கிடைக்காமல் நாங்கள் அவதிப்பட்டு வருகிறோம். எனவே, குடிநீர் குழாயை உடனடியாக சீரமைத்து, குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். மேலும், கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

தகவல் அறிந்து அங்கு சென்ற செவ்வாய்பேட்டை போலீஸார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in