பாமக முன்னாள் நிர்வாகி வீட்டில் குண்டு வீச்சு - மதுரை நீதிமன்றத்தில் ஒருவர் சரண் :

பாமக  முன்னாள் நிர்வாகி வீட்டில் குண்டு வீச்சு  -  மதுரை நீதிமன்றத்தில் ஒருவர் சரண் :
Updated on
1 min read

மதுரையில் பாமக முன்னாள் நிர்வாகி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் தொடர்புடைய ஒருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

மதுரை சிந்தாமணி ரோடு ராஜ மான் நகரைச் சேர்ந்த முன்னாள் பாமக நிர்வாகி மாரிமுத்து(32). இவரது வீட்டின் முன் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசி தப்பினர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து ஆய்வு செய்தனர். இதன்பேரில் மதுரையைச் சேர்ந்த அழகேசன், மணிகண்டன், பெரியண்ணகுமார் மற்றும் 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

காவல் ஆய்வாளர் பெத்துராஜ் தலைமையிலான தனிப்படை யினர் மேற்கண்ட நபர்களைத் தேடுகின்றனர்.

இதற்கிடையே, இந்த வழக் கில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த காட்டுப்பூச்சி என்ற வேல்முருகன் (28) மதுரை போதைத் தடுப்பு வழக்குகளுக் கான சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார்.

அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in