கோயில் குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு :

கோயில் குளத்தில் மூழ்கி இளைஞர்  உயிரிழப்பு :
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி யில் கோயில் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள சித்தாதிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் மணிகண்டன் (28). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவி ல்லை.

இந்நிலையில், பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயில் குளத்தில் நேற்று முன்தினம் இரவு குளிக்க மணிகண்டன் சென்றுள்ளார். அப்போது கால் தவறி குளத்துக்குள் விழுந்தவர் நீச்சல் தெரியா ததால் தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்தார்.

இந்நிலையில், நேற்று காலை மணிகண்டனின் சடலம் குளத்தில் மிதப்பது குறித்து தகவலறிந்த பேராவூரணி போலீ ஸார் மணிகண்டன் உடலை மீட்டு, பேராவூரணி அரசு மருத் துவமனைக்கு உடற்கூறு ஆய் வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in