சிவகங்கை நறுமண பூங்கா திறக்கப்படுமா? : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

சிவகங்கை நறுமண பூங்கா திறக்கப்படுமா? :  மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

சிவகங்கை அரசணிப்பட்டி ரமேஷ்குமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

சிவகங்கையில் 2013-ல் நறு மணப் பூங்கா அமைக்கப்பட்டது.

இந்தப் பூங்காவுக்கு ஊரக நகரமைப்பு துறை அனுமதி வழங் காததால், 8 ஆண்டுகளாக பூங்கா திறக்கப்படவில்லை.

பூங்காவை விரைவில் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்மு ருகன் அமர்வு விசாரித்தது. மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவ.30-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in