பேருந்து நிலையத்தில் தரமில்லாத கட்டிடங்கள் - ராசிபுரம் நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் தீர்மானம் :

பேருந்து நிலையத்தில் தரமில்லாத கட்டிடங்கள் -  ராசிபுரம் நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் தீர்மானம் :
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடந்தது. கட்சியின் பிரதேச குழு உறுப்பினர் எம்.ரங்கசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி மாநாட்டைத் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் கந்தசாமி, பிரதேச குழு செயலாளர் கோ.செல்வராசு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மாநாட்டில், மூத்த தலைவர் எம்.ஜி. ராஜகோபால், பி.மாதேஸ்வரன், ராசிபுரம் தெற்கு நகர கிளை செயலாளர் பி. கண்ணன், வடக்கு நகர கிளை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக ராசிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளராக கோ.செல்வராசு, ஒன்றியக் குழு உறுப்பினர்களாக சி. சண்முகம், எம். ரங்கசாமி, பி.ராணி, பி.கண்ணன்,பி.மாதேஸ்வரன், எம்.துரை, ஆர்.வெங்கட்ராமன், ஏ.பெரியசாமி தேர்வு செய்யப்பட்டனர்.

ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் அரசு திருமண மண்டபம் கட்டித்தர வேண்டும். ராசிபுரம் புதிய பேருந்து நிலைய கடைகளை தரமின்றி கட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in