பார்வை குறையுடைய : மாணவர்களுக்கு உருப்பெருக்கிகள் :

பார்வை குறையுடைய : மாணவர்களுக்கு உருப்பெருக்கிகள் :
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், மாற்றுத் திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

மேலும், பார்வைத்திறன் குறையுடைய மாணவ- மாணவியர்கள் 5 பேருக்கு கல்வி பயில்வதற்கு ஏதுவாக தலா ரூ.9,300 வீதம் ரூ.46,500 மதிப்பிலான எழுத்துகளை பெரிதாக்கி காட்டும் உருப்பெருக்கிகளை (Magnifier) வழங்கினார்.

இதில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கார்த்திகேயன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in