41-வது தடவையாக மேட்டூர் அணை நிரம்பியது :

41-வது தடவையாக மேட்டூர் அணை நிரம்பியது  :
Updated on
1 min read

மேட்டூர் அணை வரலாற்றில் 41-வது தடவையாக அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று முன்தினம் இரவு எட்டியது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில்வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதைத் தொடர்ந்துமேட்டூர் அணைக்கு நீர்வரத்துகடந்த சில வாரங்களாக அதிகரித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அணையின் நீர்மட்டம்அணை வரலாற்றில் 41-வதுதடவையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. நீர்இருப்பு 93.47 டிஎம்சி-யாக உள்ளது.

எனவே, அணை மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 22,000 கனஅடியும், 16 கண் மதகுகள் வழியாக விநாடிக்கு 18,000 கனஅடியும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 22 ஆண்டுகளுக்குப் பின் நவம்பரில் நீர்மட்டம் 120 அடியை தொட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in