கள்ளக்குறிச்சி அருகே நிலத்தகராறு காரணமாக - அரசு மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் :

கள்ளக்குறிச்சி அருகே நிலத்தகராறு காரணமாக -  அரசு மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் :
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி அருகே இரு தரப்பினர் மோதிக்கொண்டு சிகிச்சைப் பெற மருத்துவமனைக்கு வந்த இடத்தில் மீண்டும் மோதலில் ஈடுபட்டதாக 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சியை அடுத்த பொற்படாகுறிச்சி என்ற கிராமத்தில் 40 சென்ட் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக விஜயக்குமார் தரப்புக்கும், பாண்டு தரப்புக்கு இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இந்நிலையில், அடிபட்டு பாதிக்கப்பட்ட மூன்று நபர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்துள்ளனர். இதையறிந்த மற்றொரு தரப்பினர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து சிகிச்சை பெற வந்தவர்களை தாக்கியுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மீண்டும் மருத்துவமனை வளாகத்திலேயே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது மருத்துவமனைக்கு வந்திருந்தவர்கள் மோதலைக் கண்டு சிதறி ஓடியுள்ளனர். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதன் பேரில், போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனனர். மோதல் தொடர்பாக 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இரு தரப்புக்கும் இடையே மீண்டும் மருத்துவமனை வளாகத்திலேயே மோதல் ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in