இந்திய கம்யூ. நிர்வாகி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது :

இந்திய கம்யூ. நிர்வாகி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது :
Updated on
1 min read

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் நடேச.தமிழார்வன் கடந்த 10-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, பூவனூர் ராஜ்குமார் உட்பட 5 பேரை போலீஸார் ஏற்கெனவே கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய வலங்கைமான் வட்டம் தெற்குபட்டம் கீழ ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த குண்டு முத்து மகன் தினேஷ்(21) என்பவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இதற்கிடையே, இந்த கொலை சம்பவத்தைக் கண்டித்து திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு,திருத்துறைப்பூண்டிஎம்எல்ஏ கே.மாரிமுத்து தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் சிவபுண்ணியம், ஒன்றியச் செயலாளர் செந்தில்நாதன், ஒன்றியக் குழுத் தலைவர் மணிமேகலை, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சுளா மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம், இளைஞர் பெருமன்றத்தினர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in