இழப்பீடு வழங்க பனாமா கப்பல் நிறுவனம் சம்மதம் :

இழப்பீடு வழங்க பனாமா கப்பல் நிறுவனம் சம்மதம் :
Updated on
1 min read

குளச்சல் கடல் பகுதியில் அக். 22-ல் பகல் 3 மணியளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இயந்திரப் படகு மீது பனாமா நாட்டின் எம்வி நவ்யாஸ் வீனஸ் என்ற சரக்கு கப்பல் மோதியது. இதில் இயந்திரப் படகும், அதிலிருந்த மீனவர்களும் காயமடைந்தனர். இது தொடர்பாக குளச்சல் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் இயந்திரப் படகின் உரிமையாளர் ராஜாமணி, குளச்சல் போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கை நியாயமாக விசாரிக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும், வழக்கு முடியும் வரை பனாமா நாட்டுக் கப்பலை பறிமுதல் செய்ய வும் உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பனாமா கப்பலை பறிமுதல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி மும்பை துறைமுக த்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பனாமா கப்பலை அக். 29-ல் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ரூ.70 லட்சம் இழப்பீடு வழங்க கப்பல் நிறுவனம் சம்மதம் தெரிவித்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது. இரு தரப்பு க்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், பறிமுதல் செய்த கப்பலை விடு விக்கவும், இழப்பீடு பணத்தில் ரூ.50 லட்சத்தை காயமடைந்த மீனவர்களுக்கு இழப்பீடாக வழங்க ஒதுக்கி வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in